Posts

Showing posts from March, 2025

புதுச்சேரி தாமரைக்கண்ணன் அமர்வு - தமிழ் சந்தப்பாடல்கள் மரபு

சந்தப்பாடல்கள் மரபு   விவாதத்திற்கான முன்குறிப்பு: தமிழ் இசைப்பாடல் மரபில் சந்தப்பாடல்களுக்கென்று முக்கியமான இடமுண்டு. அதிக அளவில் சந்தப்பாடல்களை இயற்றி இம்மரபை பெரிதும் வளர்த்தவர் அருணகிரிநாதர்.    இன்று எளிதில் அணுகக்கூடிய திருப்புகழ் பாடல்கள் அன்றி, தமிழ் மரபிலக்கியத்தில்   ஓசைநயம் மிக்க பாடல்களை இயற்றிய ஏனைய புலவர் மரபை அறிமுகப்படுத்தும் விதமாக இங்கு காரைக்காலம்மை, ஒட்டக்கூத்தர், தாயுமானவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், குரவை இராமானுச தாசர் ஆகிய ஐந்து கவிஞர்களின் பாடல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சந்தப்பாடல்கள் 1 : தக்கயாகப்பரணி -ஒட்டக்கூத்தர்   பரணியில் காப்புப்பாடல்களையடுத்து கடை திறப்பு. வெவ்வேறு இடங்களது பெண்களையும் கடை திறக்க அழைக்கிறார் கூத்தர்.   முடிதுமெனமறை முதலியபரவவும் முறிதுமெனநிசி சரர்குலமிரியவும் முரிதுமெனவெழு குலகிரிகுலையவும் முளிதுமெனவெழு புணரிகண்மறுகவும்   மடிதுமெனமகி தலநிலைதளரவும் மறிதுமெனவடி சுரபதிவருடவும் வரதனொருதமிழ் முனிவரன்வரவரு மலயவரையர மகளிர்கடிறமினோ      ஏனைய அடிகள் - தனன தனதன ...

சரண்யா அமர்வு: கவிதை வாசிப்பின் நுழைவாயிலில்

விவாதத்திற்கான முன்குறிப்பு: கவிதை புரியவில்லை என்று சமீப காலமாக பார்க்கும் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறேன். அதை விட்டுவிடவும் முடிவதில்லை. கவிதை இன்னது என்று ஒருவாராக தெளியும் தோறும்  அது அது அல்லாமல் ஆகிறது. புதிய வாசகராக கவிதையை அணுகுவதில் இருக்கும் குழப்பங்கள், முன்முடிவுகள், இப்படி அணுகி இருக்க வேண்டாம் என்று பின்னர் அறிந்து கொண்டவை, ஆகியவற்றைப் பேசும் அமர்வாக இது இருக்கும்.  கவிதைகள்: 1.  தேவதேவன் கவிதை: கும்மாளம் சகலமும் மயங்கிச் சித்திரமாய்ச் சமைய மரத்தடியில் தன்பாட்டுக்குக் குழல் வாசித்துக்கொண்டேயிருக்கிற கண்ணன் படம் வரைந்து முடித்து கழுவிக் குவளையில் போட்ட தூரிகையாய் இருக்கையில், மூளைக்கு மேலே தொங்கும் விளக்குச் சுடரின் மின்னலடித்த ஒளியில் பளிச்சிட்டது: கூட்டங் கூட்டமாய்க் கும்மாளியிட்டுச் சிரிக்கும் குளித்துக் கரையேறாத கோபியர்கள்! 'ரூமப் பூட்டிட்டு எங்க கெளம்பியாச்சு தொர?' 'ஆடைகளைக் கவர்ந்துவர' 2.  தேவதேவன் கவிதை: இருள்ஒளி கேள்வி இருளுக்கு ஒளி பதிலானது எவ்விதம்? இருளை உற்று நோக்க நோக்க இருளே ஒளியாயிற்று. ஒளி நோக்கும் உந்தலற்று அற்று ஒளியே இருளாயிற்...

கவிஞனின் குரல்

  கவிஞர் இசையின் கவிதை: கவிஞர் இசையின் கவிதை - பார்கவியின் குரலில்: கவிஞர் சாம்ராஜின் கவிதை: கவிஞர் விஜயகுமாரின் கவிதை: கவிஞர் மதாரின் கவிதை: தாமரைக்கண்ணன் அமர்வு:  குமரகுருபரன் திருவகுப்பு - பார்கவியின் குரலில்:

கவிஞர் விஜயகுமார் அமர்வு: கவிதைகளில் இருத்தலியல்

விவாதத்திற்கான முன்குறிப்பு: நான் யார்? இந்தக் கேள்விக்கு யார்யாரிடமெல்லாம் எதனிடத்திலெல்லாம் நம்மிடத்திலேயும் கேட்டால் என்ன பதில் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ அது குறித்த சுயவிசாரனை அல்லது பரிசீலனயே இருத்தலியல் எனலாம். கவிதைகளில் தன்னிலை அறிதல், தன்னிலை மறத்தல் ஆகியவை இருபெரும் பாடுபொருட்கள். இருத்தலியலுக்கும் தமிழ்க் கவிதைக்குமான தொடர்புகள் என்ன என்பதை விவாதிப்பதே இவ்வுரையின் நோக்கம். கவிதைகள் : 1.  மனுஷ்ய புத்திரன் கவிதை: நாம் ஏன் இப்படி இருக்கிறோம் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் சதா முணுமுணுத்துக்கொண்டு எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு எதையாவது சுத்தம் செய்துகொண்டு யாரையாவது சபித்துக்கொண்டு எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு நம் வீட்டிலேயே திருடிக்கொண்...